Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM
தேமுதிக பொருளாளர் பிரேமலதா மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். விலைவாசி உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது.
அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தேமுதிக வெற்றியை கண்டு ஆணவப்படும் கட்சியோ, தோல்வியைக் கண்டு துவண்டு போகும் கட்சியோ அல்ல. வலுவான கட்டமைப்பு உடைய கட்சி தேமுதிக. கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
எங்களது திருமணம் கருணாநிதி தலைமையில் நடந்தது இந்த உலகத்துக்கே தெரியும். தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனான நட்புறவு என்றைக்கும் இருக்கும். சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் பேசுவது அக்கட்சியின் தனிப்பட்ட விஷயம். அதுபற்றி நான் கருத்துச் சொல்ல முடியாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT