Published : 28 Jun 2021 03:12 AM
Last Updated : 28 Jun 2021 03:12 AM
ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐஜியாக இருக்கும் லோகநாதன், சென்னை மாநகர காவல் தலைமையிடத்து கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் தலைமையிடத்து கூடுதல் ஆணையராக இருக்கும் கணேசமூர்த்தி, தலைமையிடத்து ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக இருக்கும் ராஜேந்திரன், தூத்துக்குடி காவலர் ஆள்சேர்ப்பு பள்ளி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் கமாண்டன்ட் ஆக இருக்கும் சுரேஷ்குமார், திருநெல்வேலி மாநகர காவல் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி காவலர் ஆட்சேர்ப்பு பள்ளி முதல்வராக இருக்கும் செந்தில், சென்னை பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் கமாண்டன்ட் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை உள்துறை முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT