Published : 25 Jun 2021 03:12 AM
Last Updated : 25 Jun 2021 03:12 AM

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு - கரோனா பாதிப்பு அதிகரிக்க யார் காரணம்? : முதல்வருடன் எதிர்க்கட்சித் தலைவர் விவாதம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கரோனா பாதிப்பு அதிகரிக்க யார் காரணம் என்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விவாதத்தில் ஈடுபட்டார்.

பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தங்கள் ஆட்சியில் கரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறினார். கடந்தமே 6-ம் தேதி பழனிசாமிதான்முதல்வராக இருந்தார். அன்று பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டியிருந்தது. ‘நடுவிலே கொஞ்சம் பக்கத்த காணாம்' என்று ஒரு திரைப்படம் வந்தது. அதுபோல, பிப்ரவரி 26 முதல் மே 6 வரையிலான காலகட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் மறைத்துவிட்டார்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட பழனிசாமி பேசியதாவது:

பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்வரைகரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு தலைமைச் செயலருடன் ஆலோசித்தபோது, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றார்.அனுமதி கோரி ஆணையத்துக்கு கடிதம் எழுதினேன். ஆணையமோ எனக்கு பதில் அனுப்பாமல், தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியது. ஆனாலும் கரோனா தடுப்பு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய பிரச்சினைக்குரிய தனியார் ஆலைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டினோம். அதில் திமுகவும் கலந்துகொண்டது. நடத்தை விதிகள் அமலில் இருந்த போதிலும் கரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம்.

இவ்வாறு பழனிசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x