Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

மதுக்கடை திறக்க புதுவை பாஜக எம்எல்ஏ கோரிக்கை :

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி பாஜக எம்எல்ஏ ஜான்குமார் வாட்ஸ்அப் ஆடியோ பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டார்.

அதில், “எனது தொகுதியில் மது கிடைக்காமல் சானிடைசர் குடித்து ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டார். மனவருத்தம் அடைந்து, ஆளுநரை தொடர்பு கொண்டு பேசினேன்.

அப்போது அவரிடம், ‘அம்மா, குடி மனநோயாகிவிட்டது. வியாதிக்கு மருந்து கொடுப்பதாக எண்ணி மதுக்கடையை திறங்கள். மதுவுக்கு பலரும் அடிமையாகி விட்டனர். சிலர் தவறான முறையில் போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்’ என்றேன். அதற்கு ஆளுநரும், கடையை திறக்க ஆவண செய்வதாக குறிப்பிட்டார். தயவு செய்து மதுவால் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், குடிக்கு அடிமையாகாமல் கொஞ்சமாக மது வாங்கி வியாதிக்கு மட்டும் குடியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x