Published : 23 May 2021 05:50 AM
Last Updated : 23 May 2021 05:50 AM

புனேவில் இருந்து - 2.30 லட்சம் கரோனா தடுப்பூசி சென்னைக்கு வருகை :

சென்னை

புனேவில் இருந்து 2.30 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன. இந்த தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, 18 முதல் 44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

இதையடுத்து, இந்த பணி திருச்சியிலும் தொடங்கியுள்ளது. சென்னையில் இந்த வயது வரம்பில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு அனுப்பிவருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகள் கொள்முதல் செய்து கொள்கின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே சீரம் நிறுவனத்தில் இருந்து 2.30 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு நேற்றுவந்தன.

சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் குளிர்சாதன வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு கொண்டு உரிய பாதுகாப்புடன் வைத்தனர். மாவட்டங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x