Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

குழந்தைகளுக்கு விரைவாக தடுப்பூசி போட நடவடிக்கை : மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சிங்கப்பூரில் புதிதாக பரவத் தொடங்கியுள்ள உருமாறிய கரோனா வைரஸ் இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், குழந்தைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்கப்பூரில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் இருந்துவரும் பயணிகளை சோதனைகளுக்கு உள்ளாக்கி, குறைந்தபட்சம் இரு வாரங்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் 2 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு செலுத்தக் கூடிய கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் முதல்கட்ட ஆய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், 2 மற்றும் 3-ம் கட்ட ஆய்வுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஆய்வுகளை விரைவாக முடித்து, தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமெரிக்காவின் சைடஸ் கேடில்லா நிறுவனம் தயாரித்துள்ள சைகோவ் - டி தடுப்பூசி மற்றும்ஃபைசர் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில்கோவேக்சின் தடுப்பூசி ஆய்வுகளை விரைவுபடுத்தவும், மற்றஇரு தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கு விரைந்துஒப்புதல் அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் இந்திய குழந்தைகளை கரோனாவில் இருந்து அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x