Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

ஆன்லைனில் சட்ட விரோதமாக - ரெம்டெசிவிர் மருந்து விற்ற 3 பேர் கைது :

சென்னை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் சிலர் விற்று வருகின்றனர். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ததாக கே.கே.நகரைச் சேர்ந்த மருந்து விற்பனையாளரான ஆதித்யன் (24), பாரிமுனையில் மருந்து கடை நடத்திவரும் ராஜ் குமார் (27), ஆயிரம் விளக்கில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றிவரும் சையத் அம்ஜித் (38) ஆகிய 3 பேரை அடையாறு போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து ரூ.1,500 மதிப்புள்ள மருந்துகளை ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 2 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்களையும், ரூ.89 ஆயிரத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x