Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

10 ஆயிரம் : போலீஸாருக்கு : கரோனா தொற்று :

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது முன்களப் பணியில் ஈடுபட்ட போலீஸார் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 267 பேர் மரணம் அடைந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் போலீஸார் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாகசென்னையில் மட்டும் சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸாருக்கு சிகிச்சை அளிக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கிண்டி அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x