Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

தமிழகத்தில் புதிதாக 10,986 பேருக்கு கரோனா : ஒரே நாளில் முதியவர்கள் உட்பட 48 பேர் உயிரிழப்பு

சென்னை

தமிழகத்தில் புதிதாக 10,986 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் முதியவர்கள் உட்பட 48 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்6,689, பெண்கள் 4,297 என மொத்தம் 10,986 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 56பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 3,711, செங்கல்பட்டில் 1,029, கோவையில் 686, திருவள்ளூரில் 508 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 13,378 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 57,927 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 20,369 பேர் குணமடைந்துள்ளனர்.

6,250 பேர் குணமடைந்தனர்

நேற்று மட்டும் சென்னையில் 1,967 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 6,250 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 28,005 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 79,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட48 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 17 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13,205 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4,432 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 90,364,கோவையில் 68,835, செங்கல்பட்டில் 68,526, திருவள்ளூரில் 52,080 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 263 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 14 லட்சத்து 549 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 1,329 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 நீதிபதிகளுக்கு தொற்று

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதித் துறை ஊழியர்கள் பலர் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளனர். கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, வழக்கு விசாரணைகள் காணொலி முறையில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயர் நீதிமன்றத்தில் மற்ற நீதிபதிகளுக்கும் கரோனா பரிசோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x