Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினை விடம், அறிவுசார் பூங்கா, அருங்காட்சியகம் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற் கரையில் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில், 50,422 சதுரஅடியில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க ரூ.79.75 கோடி ஒதுக்கப்பட்டது.
பணிகள் பெரும்பாலும் முடிந்த நிலையில், நினைவிடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி கடந்த ஜன.27-ம் தேதி திறந்து வைத்தார். அறிவுத்திறன் பூங்கா, அருங்காட்சியக பணிகள் முடியாததால்பிப்.2-ம் தேதி நினைவிடம் மூடப்பட்டது.
பிறகு, அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்காவை பிப்.24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளன்று முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிட வளாகங்கள் மக்கள் பார்வைக்கு நேற்று திறக்கப்பட்டன.
அருங்காட்சியகத்தில், ஜெயலலிதா மெழுகுச் சிலை, பல்வேறு புகைப்படங்கள் உள்ளன. கேட்கும் கேள்விகளுக்கு திரையில் ஜெயலலிதாவே வந்து பதில் சொல்வது போன்ற மெய்நிகர் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT