Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM
கூடலூர்: பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது அணையைக் கண்காணித்துப் பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை நியமித்தது.
இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழக அரசின் பிரதிநிதியாகப் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் மணிவாசன், கேரள மாநிலப் பிரதிநிதியாக நீர்வளத் துறைச் செயலர் டி.கே.ஜோஸ் உள்ளனர். கடந்த ஆண்டு ஜன.28-ம் தேதி இக்குழு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது. இந்நிலையில் நேற்று இக்குழுவினர் அணையை மீண்டும் ஆய்வு செய்தனர். 21 ஆண்டுகளுக்குப் பிறகு அணைக்கு மின்வசதி கிடைத்துள்ளதால் 13 மதகுகளையும் இயக்கி பரிசோதனை செய்து அணை பலமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT