Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

பிப்ரவரி 17 முதல் 3 நாட்கள் தென்மாவட்டங்களில் முதல்வர் பிரச்சாரம்

தூத்துக்குடி: முதல்வர் பழனிசாமி வரும் 17-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக, அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது: வரும் 16-ம் தேதி முதல்வர் பழனிசாமி பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ம் ஆண்டு தொடங்குகிறது. இந்த 4 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதல் மாநிலமாக பல்வேறு விருதுகளைப் பெற்று, சாதனை படைத்துள்ளது.

வரும் 17-ம் தேதி காலை முதல்வர் பழனிசாமி விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அன்று தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் முதல்கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து 18, 19-ம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார்.

விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரூ.12,110 கோடியை முதல்வர் தள்ளுபடி செய்துள்ளார். இதுபோல இன்னும் பல திட்டங்கள் வரவிருக்கின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x