Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவினரின் பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்க, அக்கட்சி தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா நேற்று இரவு மதுரை வந்தடைந்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் முதல்வர் பழனிசாமியும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ஏற்கெனவே பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டனர்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தை மதுரையில் இன்று (ஜன. 30) தொடங்குகிறது. பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று மாலை நடைபெறுகிறது.
இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்று பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜே.பி. நட்டா விமானம் மூலம் நேற்றுஇரவு மதுரை வந்தார். இரவில்தனியார் விருந்தினர் விடுதியில்தங்கினார். இன்று காலைமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் விருந்தினர் மாளிகையில் பரிவார் நிர்வாகிகள், சமூக வலைதளப் பிரிவு நிர்வாகிகள், புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்கள், முக்கியப் பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். மாலையில் அம்மா திடல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT