Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்புக்கான ஆசிரியராக 56 வயதுள்ள பெண் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் உடல் நலக் குறைவு காரணமாக பள்ளிக்கு வரவில்லை.
இதற்கிடையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவில், கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த 24-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது வகுப்பு மாணவியர் 42 பேரை 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. இதுதவிர, இப்பள்ளியில் பணியாற்றும் 45 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று அறியும் பரிசோதனைக்கான மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT