Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

அலோபதி - ஆயுஷ் இணைக்க எதிர்ப்பு நாடு முழுவதும் பிப்.1 முதல் தொடர் உண்ணாவிரதம் இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

சென்னை

அலோபதி - ஆயுஷ் மருத்துவ முறைகளை ஒன்றாக இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும்1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 50இடங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

இதுகுறித்து இந்திய மருத்துவசங்கத்தின் தலைவர் ஜெ.ஏ.ஜெயலால் கூறியபோது, ‘‘அலோபதி - ஆயுஷ் மருத்துவத்தை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.1-ம் தேதி முதல்14-ம் தேதி வரை இப்போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 4 இடங்களில் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x