Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

வங்கதேசம் தப்பும் கொள்ளைக் கும்பல்கள்

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி பேங்க் ஆப் பரோடா கிளையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ம்தேதி நுழைந்த மர்ம நபர்கள், காஸ் வெல்டிங் மூலம் வங்கி லாக்கரை உடைத்து ரூ.12 கோடி மதிப்புள்ள 6,038 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றனர்.

இதேபோன்று, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சூளகிரி அருகே மேலுமலையில் செல்போன் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். லாரியிலிருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்த மர்ம நபர்கள் வங்க தேசத்தில் விற்பனை செய்தனர்.

இந்த 2 கொள்ளை சம்பவங்களிலும் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு, நகை, செல்போன்களை வங்கதேசத்தில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓசூரில் நிதி நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்டவர்களும் வங்கதேசத்துக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாக போலீஸார் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x