Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

விவசாயிகளுக்கு ரூ.487 கோடி புயல் நிவாரணம் விடுவிப்பு

சென்னை

தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிவர் மற்றும் புரெவி புயல்களால் ஏற்பட்ட கனமழை காரணமாக வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் 3.10 லட்சம் ஹெக்டர் அளவில் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, ஜன.2-ல் நிவாரணமாக ரூ.585 கோடியே 46 லட்சத்தை அறிவித்தது. இந்த நிவாரணத்தில் இதுவரை, ரூ.487 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுஉள்ளது. மீதமுள்ள தொகை விவசாயிகள்வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

நடப்பு ஜனவரி மாதத்தில் இதுவரை பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவான 10.2 மில்லி மீட்டருக்கு இதுவரை மிக அதிகமாக 108.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறுவடை நிலையில் இருந்த நெற்பயிர்களும், இதர பயிர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், போர்க்கால அடிப்படையில் பாதிப்பு கணக்கெடுபு மேற்கொள்ள வேளாண், வருவாய்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x