Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM
பள்ளிகள் திறப்பு குறித்த பெற்றோர் கருத்துகேட்பு கூட்ட அறிக்கையை இன்று (ஜன.7) மாலைக்குள் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்குப்பின் 10, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பெற்றோர் கருத்துகேட்பு கூட்டம் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்துவித பள்ளிகளிலும் நேற்று தொடங்கியது. இதில் பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் கருத்துகளை பதிவுசெய்தனர்.
அதைத்தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (ஜன.7) கருத்துகேட்பு கூட்டம் நடைபெறஉள்ளது.
கூட்டம் முடிந்த பின் பெற்றோர் தெரிவித்த கருத்துகளின்தொகுப்பறிக்கையை இறுதிசெய்து இன்று மாலையே மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்திஉள்ளது.
அதன்படி பெரும்பாலான பெற்றோர் பள்ளியை திறக்க ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT