Published : 03 Jan 2021 03:21 AM
Last Updated : 03 Jan 2021 03:21 AM
மக்கள் கிராமசபைக் கூட்டத்தில், தொண்டாமுத்தூர் பகுதியில் நிலவும் பிரச்சினைகளை மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். திடீரென ஒரு பெண் எழுந்து, ஸ்டாலினிடம் கேள்வி கேட்க முற்பட்டார்.
அப்போது அவரிடம் மு.க.ஸ்டாலின், "யார் நீங்கள்,எந்த ஊர்?" என்றார். அந்தப் பெண் "மைல்கல்" என்றார்."அது எங்கே இருக்கிறது. இந்த ஊராட்சியா?" என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தப்பெண், "இதுகூடத் தெரியவில்லையா?" என்று கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, "அமைச்சர் வேலுமணி உங்களை அனுப்பியுள்ளார். நான் உங்களுக்கு பதில் கூற முடியாது" என்று ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து, அந்தப் பெண் வாக்குவாதம் செய்ததால், போலீஸார் உதவியுடன் கூட்டம் நடைபெறும் பகுதியில் இருந்து அந்தப் பெண் வெளியேற்றப்பட்டார். கூட்டத்துக்கு வெளியே, ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால், அந்தப் பெண்ணையும், அவருடன் வந்தவரையும் திமுகவினர் தாக்கினர். பின்னர், அப்பெண்ணின் செயலைக் கண்டித்துதிமுகவினர் சிறிது நேரம் மறியல் செய்தனர்.
அப்பெண்ணையும், அவருடன் வந்த ராஜன் என்பவரையும் கோவை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். அந்தப் பெண் கோவை மைல்கல் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி(40) என்பதும், அதிமுக தெற்கு மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் என்பதும் தெரியவந்தது. திமுகவினரைக் கண்டித்து தொண்டாமுத்தூர் காவல் நிலையம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர், திமுகவினரும் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT