Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM

திருப்பூரில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டங்கள் திருப்பூர் அருகில் உள்ள செங்கப்பள்ளியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் திருப்பூரில் டிச.15, 16 தேதிகளிலும் டிச.17-ம் தேதி மாநிலக் குழுக் கூட்டமும் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன், தேசியநிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு, மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம் உட்பட மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள். மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள், கரோனா நோய் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், சிறு குறு, நடுத்தரத் தொழில்கள் சந்திக்கும் பிரச்சினைகள், வருகிற சட்டப் பேரவைத் தேர்தல் தயாரிப்புப் பணிகள் உட்பட முன்னுரிமை பெறும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x