Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிச.3-ம் தேதி (இன்று) காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் நடக்கவுள்ளது. டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறும் இக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக திமுக சார்பிலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. என்ன மாதிரியான போராட்டம் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT