Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

புதுச்சேரி ஆழ்கடலில் காணப்படும் அரிய வகை கொம்பு திருக்கை மீன்கள்

புதுச்சேரி கடல் பகுதியில் கூட்டமாக காணப்படும் அரிய வகை கொம்பு திருக்கை மீன்களை ஆழ்

கடல் நீச்சல் வீரர்கள் கண்டு புகைப்படம் எடுத்துள்ளனர்.

ஆழ்கடல் நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான அரவிந்தன் தலைமையில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் 10 பேர், ஆழமான கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு அரியவகை கொம்பு திருக்கை மீன்களை அவர்கள் கண்டு அதை வீடியோ, படங்களாக எடுத்திருந்தனர். நேற்று அதை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அரவிந்தன் கூறும்போது, "நிவர் புயலுக்கு முன்பாக தேங்காய்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் 115 அடி ஆழத்தில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டிருந்தோம். அப்போது அரிய வகை கொம்பு திருக்கை மீன்களை கண்டோம். 15 அடி அகலமும் ஆறடி உயரமும் கொண்ட மீன்களைக் கூட்டமாக முதல்முறையாக பார்த்தது பிரமிப்பாக இருந்தது.

கடந்த 12 ஆண்டுகளாக ஆழ்கடல் நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறோம். புதுச்சேரி கடல் பகுதியில் இப்படி பார்ப்பது இதுவே முதன்முறை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x