Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
சென்னை - கன்னியாகுமரி தொழில்வழி சாலை திட்டத்துக்காக நாமக்கல் மாவட்டம் அக்கியம்பட்டி கிராமத்தில் உள்ள சில வீடுகளைஇடித்து நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து நில உரிமையாளர்கள் அளித்த மனுக்களை, இத்திட்டத்துக்கான சேலம் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி கடந்த ஜூன் மாதம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். பிறகு, கடந்த ஜூலை மாதம் இந்த நிலங்களை கையகப்படுத்தி தமிழக நெடுஞ்சாலை சட்டத்தின்படி, சென்னை நில நிர்வாக ஆணையரும் உத்தரவிட்டுள்ளார்.
இதை எதிர்த்து, வீட்டு உரிமையாளர்கள் 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
வீட்டு உரிமையாளர்களின் ஆட்சேப மனுக்களை அதிகாரிகள்இருவரும் தீவிரமாக பரிசீலித்திருக்க வேண்டுமே தவிர, இயந்திரத்தனமாக செயல்பட்டு நிராகரித்திருக்க கூடாது.
இந்த வழக்கில் அரசு பிறப்பித்தஉத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட, மனுதாரர்களுக்கு போதிய வாய்ப்பு அளித்து அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அதை அரசு முழு மனதையும் செலுத்தி சட்டப்படி பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT