Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x