Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

மாநில அளவிலான பூப்பந்து போட்டி சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு :

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மாநில பூப்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டினார் முதல்வர் உஷாகுமாரி.

காரைக்குடி

சென்னை முகப்பேரில் மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் 17 மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி பிளஸ் 1 மாணவி சானியா சிக்கந்தர் முதலிடம் பிடித்தார். எட்டாம் வகுப்பு மாணவர் அஸ்வின்லெனின் முத்துராஜ் 15 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் 2-ம் இடம் பிடித்தார். இதன்மூலம் முதல்வர் நிதி பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பூப்பந்து போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை செட்டிநாடு பப்ளிக் பள்ளித் தலைவர் குமரேசன், துணைத் தலைவர் அருண்குமார், பள்ளி முதல்வர் உஷாகுமாரி ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x