Published : 14 Feb 2021 03:19 AM
Last Updated : 14 Feb 2021 03:19 AM

மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க மண்டபம் கடலில் விடப்பட்ட 8 லட்சம் இறால் குஞ்சுகள்

ராமேசுவரம்

மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பாக, மீன் வளத்தைப் பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காகவும் 8 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் ராமேசுவரம் அருகே மண்டபம் முனைக்காடு கடலில் விடப்பட்டன.

ராமேசுவரம் அருகே மரைக்காயர் பட்டினத்தில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இங்கு மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதியில் வசிக்கும் உயிரினங்கள் குறித்தும், அவற்றின் வாழ்வியல் சூழல் மற்றும் கடலில் அவ்வப்போது ஏற்படும் மாசு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. மேலும், பல்வேறு மீன் இனங்களின் குஞ்சுகள் பொரிப்பகமும் இங்கு இயங்கிவருகிறது. இங்கு உருவா க்கப்படும் மீன்கள் மற்றும் இறால் மீன் குஞ்சுகளை அவ்வப்போது கடல் பகுதியில் விடுவதன் மூலம், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி வருகின்றனர். ராமேசுவரம் அருகே மண்டபம் முனைக்காடு கடற்பகுதியில் மாலை இறால் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்தியக் கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மூத்த ஆராய்ச்சியாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

இந் நிகழ்ச்சி குறித்து மூத்த ஆராய் ச்சியாளர் ஜெயக்குமார் செய்தி யாளர்களிடம் கூறியதாவது,

மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருகிறது. இதனால் இறால் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து கடலில் விட்டு இறால் வளத்தைப் பெருக்கும் முயற்சியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டு வருகிறது. இதனால் இறால் வளத்தைத் தக்கவைத்து கொள்வதோடு, மீனவர்களின் வாழ் வாதாரமும் பாதிக்கப்படாது. இதன் மூலம் மீனவர்களுக்குத் தேவையான இறால்களை வளர்ந்ததும் பிடித்துக் கொள்ள முடியும்.

2020-2021 ஆண்டுகளில் 27 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் 8 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன. இவ்வாறு கடலில் விடப்படும் இறால்மீன் குஞ்சுகள் 5 மாதங்களில் உரிய வளர்ச்சியைப் பெறும். இவற்றை மீனவர்கள் பிடித்து பயன்பெறலாம்'' என்றார். இதில், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச் சியாளர்கள் சங்கர், ஜான்சன் ஊழியர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x