Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

நாட்டுப்படகு மீனவர்களுக்கு பைபர் படகுகள் வாங்க மானியம் வழங்க அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் விசைப்படகுகள் வாங்க மானியம் அளிப்பது போல நாட்டுப்படகு மீனவர் களுக்கு பைபர் படகுகள் வாங்க மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்க வேண்டும் என ராமநா தபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்திடவும் தூண்டில் மற்றும் செவுள் வலை படகு சூரை மீன்பிடிப்பினை ஊக்கப்படுத்திடும் நோக்கில் மீனவர்களுக்கு புதிய மீன்பிடி விசைப்படகு கட்டும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தூண்டில் மற்றும் செவுள் வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப் படகை கட்ட படகு ஒன்றுக்கு ஆகும் செலவினத்தில் 70 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.40 லட்சம்) மீனவர்களுக்கு மானி யமாக வழங்கப்படும். தமிழகத்தில் விசைப்படகுகள் வாங்க மானியம் அளிப்பது போல நாட்டுப்படகு மீனவர்களுக்கு பைபர் படகுகள் வாங்க மானியம் வழங்க வேண்டும் கோரிக் கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவர் எஸ்.பி ராயப்பன் கூறியதாவது,

ராமேசுவரம் பகுதிகளில் பல தலைமுறைகளாக பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றி உள்ள கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பு முறையை விசைப்படகு மீனவ ர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்க மானியமும் வழங்குகின்றனர்.

இது போல நாட்டுப்படகு மீனவர்களுக்கும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்றவாறு உள்ள பைபர் படகுகள் , இயந்திரம், வலைகள் மற்றும் தூண்டில் போன்ற மீன்பிடி உபகரணங்களை மானிய விலையில் வழங்கிட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இதன் மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x