Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM
வகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை 3 மாதங்களிலேயே சேத மடைந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை அருகே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சின்னகண்ணனூர் வழியாக கிழவிக்குளம் கிராமத்துக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக இருந்தது. அச்சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து 3 மாதங்களுக்கு முன்பு 8 கி.மீ. தூரத்துக்கு ரூ.4.8 கோடியில் சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால் சாலையோரங்களில் மண் அணைக்காமல் விட்டுவிட்டனர்.
மேலும் அச்சாலை தரமற்று அமைக்கப்பட்டதால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளன. சாலை அமைத்து 3 மாதங்களிலேயே சேதமடைந்ததால் கிராமமக்கள் அதிருப்தி அடைந்துள் ளனர்.
இதுகுறித்து சின்னகண்ணனூரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் கூறியதாவது: தார்ச்சாலை அமைத்ததும் அரிப்பு ஏற்படாமல் இருக்க, ஓரங்களில் மண் அணைக்கப்படும். ஆனால் மண் அணைக்காமலேயே விட்டுவிட்டனர்.
இதனால் மண் அரிப்பு ஏற்படுவ தோடு, எதிர், எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்வதிலும் சிரமம் உள்ளது. மேலும் தரமற்ற சாலையால் சில மாதங்களிலேயே ஆங்காங்கே சேத மடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT