Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

காரைக்குடி - தூத்துக்குடி புதிய ரயில் பாதை அறிவிப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு

மத்திய பட்ஜெட்டில் காரைக்குடியில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அறிவிக்கப்பட்டதற்கு தென்மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் வரவேற்றுள்ளனர்.

கன்னியாகுமரியில் இருந்து திருவ னந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர் ணாகுளம், கோழிக்கோடு, மங்களூர் வழியாக மும்பை வரை 1,922 கி.மீ.க்கு மேற்கு கடற்கரை ரயில்பாதை உள்ளது. இந்த ரயில் பாதையால் கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் பயன்பெறுகின்றன.

மேற்குக் கடற்கரையில் உள்ள அனைத்துத் துறைமுகங்களையும் இந்த வழித்தடம் இணைப்பதால் சரக்குகள் எடுத்துச் செல்வதில் சிரமம் இல்லை. இதனால் இப்பகுதிகள் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ளன. இதுபோல் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும் ரயில் வழித்தடம் அமைக்க வேண்டுமென நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது.

கூடங்குளம் அணுமின் நிலையம், நாங்குனேரி தொழில்நுட்பப் பூங்கா, மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்கத் திட்டமையம் மற்றும் தூத்துக்குடி, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை எண்ணூர் உள் ளிட்ட துறைமுகங்களில் இருந்து பெரும் பாலும் சாலை வழியாகவே சரக்குகள் கையாளப்படுகின்றன.

கிழக்குக் கடற்கரை ரயில் பாதை அமைந்தால் சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பதோடு, புதிய தொழிற்சா லைகள், தொழில் நிறுவனங்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. கிழக்குக் கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியில் தொடங்கி திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி, திருத் துறைப்பூண்டி, திருவாரூர், மயிலா டுதுறை, கடலூர், புதுச்சேரி, மகாபலிபுரம் வழியாக சென்னை வரை செல்கிறது.

இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே கடலூரில் இருந்து காரைக்குடி வரை ரயில் பாதை உள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை 178.28 கி.மீ.க்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என 2008-2009-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.523.52 கோடி ஒதுக் கப்பட்டது. ஆனால் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. அதேபோல கன்னியாகுமரியில் இருந்து திருச்செந் தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை புதிய ரயில் பாதைக்கு ஆய்வு நடத்தப்படும் என அதே பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 214.81 கி.மீ.-க்கு காரைக்குடியில் இருந்து தூத்துக்குடி வரையும், 247.66 கி.மீ.-க்கு தூத்துக்குடியில் இருந்து கூடங்குளம் வரைக்கும் ரூ.1,080 கோடியில் ரயில் தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு ரயில்வே துறையிடம் அறிக்கை அளிக் கப்பட்டது. ஆனால், 11 ஆண்டுகளாகச் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக கடலூர் வரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி பணிகள் தொடங்கும் எனவும், காரைக் குடி-தூத்துக்குடி புதிய ரயில் பாதை அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டு ள்ளது. இத்திட்டம் உட்பட தமிழகத்துக்கு ரூ. 40,932 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி. திராவி டமணி கூறியதாவது: காரைக்குடி- தூத்துக்குடி ரயில்பாதை அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அறிவிப்போடு நிற்காமல் திட்டப் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x