Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM

கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் தீபாவளி பரிசு கூப்பன் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தீபாவளி பரிசு கூப்பனாக கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக 18 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வீதம் பணமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 412 பேருக்கு ரூ.6 கோடியே 22 லட்சத்து 6 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று (நேற்று) முதல் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அமைப்புசாரா தொழிலாளர்க ளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் தீபாவளி பரிசு கூப்பனாக வழங்கப்படுகிறது. கட்டிடத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.3 ஆயிரம் தீபாவளி பரிசு கூப்பனாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x