Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM

அண்ணா மேலாண்மை நிலையத்தின் பெயர் மாற்றம் :

தமிழக அரசின் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் தலைமை பயிற்சி நிறுவனமான சென்னையில் இயங்கி வரும் அண்ணா மேலாண்மை நிலையம் இதுநாள் வரை அண்ணா மேலாண்மை நிலையம் என அழைக்கப்பட்டு வந்தது. இது அரசு நிர்வாக பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனம் என்பதை கருத்தில்கொண்டு இனிமேல் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என அழைக்கப்படும்.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. இத்தகைய பயிற்சி நிலையங்கள் பிற மாநிலங்களில் நிர்வாக பணியாளர் கல்லூரி என்றுதான் அழைக்கப்படுகின்றன. எனவே, அண்ணா மேலாண்மை நிலையம் இனிமேல் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என அழைக்கப்படும் என தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x