Published : 14 Jan 2021 03:23 AM
Last Updated : 14 Jan 2021 03:23 AM

தோவாளையில் பூக்கள் விலை உயர்வு

நாகர்கோவில்: தோவாளை மலர் சந்தைக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வழக்கத்தைவிட அதிகமான பூக்கள் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் சத்தியமங்கலம், மதுரை, பெங்களூரு, ஓசூர், சேலம், உதகை போன்ற பகுதிகளில் இருந்து வந்தன.

அதே நேரம் மல்லிகை பூவுக்கு தட்டுப்பாடு நிலவியது. மொத்தமே 30 கிலோ மட்டுமே மல்லிகை பூ வந்ததால், விலை கடும் ஏற்றம் அடைந்தது. முந்தைய தினம் 1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை, நேற்று ரூ.2,500-க்கு விற்பனை ஆனது. இதைப்போல ரூ.600-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ரோஜா ரூ.220, கிரேந்தி 70, சம்பங்கி 125, வாடாமல்லி 100, கோழிக்கொண்டை 60, அரளி ரூ.250-க்கு விற்பனை ஆனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x