Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

தஞ்சாவூரில் பாமக, வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நேற்று தஞ்சாவூர் மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், வன்னியர்களின் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தடை ஆணை பெற்று இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். நடிகர் சூர்யாவை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பாமக முன்னாள் மாவட்டச் செயலாளர் அரசூர் ஆறுமுகம், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அனுமதியின்றி போராட் டம் நடத்தியதாக, 15 பெண்கள் உட்பட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x