Published : 04 Nov 2021 03:14 AM
Last Updated : 04 Nov 2021 03:14 AM

மாடு விடும் விழா தடுத்து நிறுத்தம் :

காட்பாடி: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் கிராமத்தை யொட்டியுள்ள காசிக்குட்டை பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி மாடு விடும் திருவிழா நடத்த ஊர் பொதுமக்கள் நேற்று ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதற்கான அனுமதி பெறவில்லை எனக்கூறப்படுகிறது.

காசிக்குட்டையில் உள்ள காலி இடத்தில் அதிகாலை 5.40 மணிக்கு மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு ஓடின. காட்பாடி, கே.வி.குப்பம், மேல்மாயில், குடியாத்தம், பேரணாம்பட்டு போன்ற பகுதி களில் இருந்து மாடுகள் பங்கேற்றன. மாடு விடும் விழாவையொட்டி அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.

இது குறித்து தகவலறிந்த காட்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாடு விடும் விழாவை தடுத்து நிறுத்தி, விழா ஏற்பாட்டாளர்களிடம் விசா ரணை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் தரப்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் விழா என்பதால் தடுக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தனர். இருப்பினும், காவல் துறையினர் அனுமதி தர மறுத்து அங்கு கூடியிருந்த கூட்டத்தை கலைத்தனர்.

இதையடுத்து, வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மாடுகள் திருப்பி அனுப்பப்பட்டன. மாடு விடும் விழா ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x