Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

அங்கன்வாடி ஊழியர்கள் நாளை தர்ணா நடத்த முடிவு :

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் காரைக்காலில் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித் தார். செயலாளர் பாகிரதி மற்றும் நிர்வாகிகள், காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் காலம் கடத்து வது, கடந்த 4 ஆண்டுகளாக போனஸ் வழங்காமல் இருப்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்து நாளை(அக்.25) காரைக்கால் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலக வாயிலில் தர்ணா நடத்துவது. அதன் பின்னரும் தீர்வு கிடைக்காதபட்சத்தில் அக்.29-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் காரைக்காலிலிருந்து அதிக ஊழியர்கள் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x