Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் :

நாகப்பட்டினம்: தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாகை மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள் மற்றும் தனிநபர் தொழில் முனைவோருக்கு உதவி, சேவைகள் செய்ய தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர், தொழில் முனைவு நிதி அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு தலா ஒருவர் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணியிடத்துக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், http:\\www.tnrtp.org என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள், விதிமுறைகளுக்குட்பட்டு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், எண் 221, 2-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் 611003 என்ற முகவரியில் நவ.15-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x