Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM
டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிறுபான்மை நலக்குழு சார்பில் சாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிறுபான்மை நலக் குழு வட்டாரத் தலைவர் விஸ்வநாத் தலைமை வகித்தார். ஜமாத் தலைவர் காதர் பேசினார். நிர்வாகி அலிம்ஷா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தெய்வானை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலச் செய லாளர் எஸ்.லட்சுமி நிறைவுரை யாற்றினார்.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் மதுரை வண்டியூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட கன்வீனர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் புறநகர் மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ், மாதர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் க.பிரேமலதா பேசினர். மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத் தாய் நிறைவுரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT