Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM
உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி யில் ஊட்டச்சத்து குறித்த கருத் தரங்கம் நடந்தது. கல்லூரிச் செயலாளர் எம்.தர்வேஷ் முகையதீன் தலைமை வகிக்க, ஆட்சி மன்ற குழுத் தலைவர் எஸ்.மீரான் முன்னிலை வகித்தார். முதல்வர் ஹெச்.முகமதுமீரான் வரவேற் றார். உதவிப் பேராசிரியர் கே.ஆரிபா பானு ஊட்டச்சத்து குறித்து பேசினார்.
துரித உணவுகளை தவிர்த்து காய்கறி, பழங்கள் மற்றும் தானியங்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். காலை உணவை தவிர்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT