Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM

நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு :

ஓசூர்

தேன்கனிக்கோட்டை அருகே தெரு நாய்கள் கடித்ததில் 10 நாய்கள் உயிரிழந்தன.

தேன்கனிக்கோட்டை வட்டம் அந்தேவனப்பள்ளி அருகேயுள்ள ராமச்சந்திரம் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலப்பா (65). மாற்றுத்திறனாளியான இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று இரவு ஆடுகளை வீட்டின் அருகில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு உறங்கச்சென்றுள்ளார்.

இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு கோபாலப்பாவெளியே வந்து பார்த்தார்.அப்போது, தெருநாய்கள் கூட்டமாக பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்துக் கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த கோபாலப்பா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாய்களை விரட்டினார். இதில், 10 ஆடுகள் உயிரிழந்தன.இந்நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x