Published : 19 Sep 2021 03:16 AM
Last Updated : 19 Sep 2021 03:16 AM
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு, கோட்டுச்சேரிமேடு, பட்டினச்சேரி, அக்கரைவட்டம் ஆகிய மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மாவட்ட நலவழித் துறை, ஜிப்மர் மருத்துவமனை, விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து, கண் மற்றும் தோல் நோய்கள் தொடர்புடைய சிறப்பு மருத்துவ முகாம்களை நேற்று நடத்தின. காரைக்கால்மேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் அர்ஜூன் சர்மா, ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால் ஆகியோர் பங்கேற்று, முகாமை தொடங்கிவைத்தனர். நலவழித்துறை துணை இயக்குநர் கே.மோகன்ராஜ் உடனிருந்தார். மற்ற பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம்களுக்கும் ஆட்சியர் சென்று பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT