Published : 19 Sep 2021 03:16 AM
Last Updated : 19 Sep 2021 03:16 AM

தொழிலாளியை மிரட்டியதாக இருவர் கைது :

கோவில்பட்டி

புதியம்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் பாலன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலமடம் பகுதியில் முப்புலிவெட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி அண்ணாவி(38) என்பவரை, 2 பேர் ஆயுதங்களை காண்பித்து மிரட்டிக் கொண்டிருந்தனர். போலீஸார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த முருகன் மகன் சக்திவேல் (24), காட்டுராஜா மகன் முத்துகனி (22) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

சக்திவேல் மீது ஏற்கெனவே புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 4 வழக்குகளும், முத்துகனி மீது கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x