Published : 19 Sep 2021 03:16 AM
Last Updated : 19 Sep 2021 03:16 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு, மேல்புறம், முஞ்சிறை, கிள்ளியூர் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 268 முகாம்களில் இன்று (19-ம் தேதி)மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 43 முகாம்களும், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 61, முஞ்சிறை ஒன்றியத்தில் 57, கிள்ளியூர் ஒன்றியத்தில் 54, மேல்புறம் ஒன்றியத்தில் 53 முகாம்களும் நடைபெறுகின்றன. காலை 9 மணி முதல்மாலை 7 மணி வரை நடைபெறும் இம்முகாமில் 18 வயதுக்குமேற்பட்ட இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அனைவரும் தடுப்பூசி செலுத்தி, மாவட்டநிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT