Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM
முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக 9 கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் நேற்று (மே 10) தொடங்கி வரும் 24-ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை கடைகள், பால் விற்பனை மற்றும் தேநீர் கடைகள் பகல் 12 மணி வரை செயல்படவும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் மட்டும் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு வரும் பொதுமக்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் சிவசுப்ரமணியம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீஸார் கோவை ரயில் நிலையம் முன்புள்ள கடைகளில் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, முகக்கவசம் அணியாமல் இருந்தது, சமூக இடைவெளியை பின்பற்றாதது, கடையில் அமர்ந்து உணவருந்த வாடிக்கையாளர்களை அனுமதித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 9 கடைகளுக்கு மொத்தம் ரூ.10,200 அபராதம் விதித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT