Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மீண்டும் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக குழித்துறையில் 22 மிமீ., மழை பதிவானது.
பூதப்பாண்டியில் 18 மிமீ., மாம்பழத்துறையாறில் 14, ஆனைக்கிடங்கில் 10 மிமீ., மழைபெய்திருந்தது. நேற்று மாலையிலும் பெய்த திடீர் மழையால் மாவட்டத்தில் குளிர்ச்சி நிலவியது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 102 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், நீர்மட்டம் 41.56 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 171 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 38 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 54.37 அடியாக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் நேற்று அணையின் நீர்மட்டம் 0.5 அடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 7.42 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.
கோவில்பட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.
மதியத்துக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டன. கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இலக்குமி ஆலை மேலக்காலனி, அத்தைகொண்டான், இனாம் மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 3.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து, 4.15 மணி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT