Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திமுக சின்னம் அச்சிடப்பட்ட 9,000 மாதிரி வாக்காளர் தகவல் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆசைத்தம்பி தலைமையிலான குளித்தலை தொகுதியின் நிலையான கண்காணிப்புக் குழுவினர் குளித்தலை அருகே உள்ள மருதூர் சோதனைச்சாவடியில் ஏப்.3-ம் தேதி நள்ளிரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக குளித்தலையைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் சதீஷ்குமார்(40) வந்த காரை சோதனையிட்டனர். அதில், திமுக சின்னம் அச்சிடப்பட்ட 9,000 மாதிரி வாக்காளர் தகவல் சீட்டுகள் (பூத் ஸ்லிப்கள்) அச்சக முகவரியின்றி இருந்ததால், அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், குளித்தலை போலீஸார் மக்கள் பிரதிநிதித் துவ சட்டம் 1951-ன் கீழ் சதீஷ்குமார் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT