Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - ஓட்டப்பிடாரத்தில் 6.09 லட்சம் பறிமுதல் :

ஓட்டப்பிடாரம் அருகே வாக்காளர் களுக்கு பணம் விநியோகித்த 6 பேர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.6.09 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓட்டப்பிடாரம் அருகே ஓசானுத்து பகுதியில் நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் காளிராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் ரோந்து சென்றனர்.

அப்போது பணம் விநியோகத்தில் ஈடுபட்ட கீழமங்கலத்தை சேர்ந்த கண்ணன் (50), புதூர் பாண்டியாபுரம் வேலாயுதபுரத்தை சேர்ந்த மேகலிங்கம் மகன் ஜெயராம் (32), கவர்னகிரியை சேர்ந்த சன்னாசி மகன் அருண்குமார் (20) ஆகிய 3 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.5,84,180 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனி பகுதியில் பணம் விநியோகித்த சிலோன் காலனியைச் சேர்ந்த ரவீந்திரகுமார் (53), ராஜா (66), கலைமணி (51) ஆகிய 3 பேரை பிடித்த பறக்கும் படையினர், அவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

பிடிப்பட்ட 6 பேரையும் பறக்கும் படையினர் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x