Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

குமரியில் தேர்தல் பணிக்கு 16,000 ஊழியர்கள்

குமரி மாவட்டத்தி்ல் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற வுள்ளது.

இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் தலா 6 ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதில் ஏற்கெனவே 14,000 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு

உள்ளனர். தேர்தல் பணிக்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேவைப்படுவதால், மேலும் 2 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஏற்கெனவே மாவட்டத்தில் பதற்றமானவையாக 286 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x