Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

காரைக்கால் கைலாசநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா மார்ச் 19-ல் தொடக்கம்

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் நிகழாண்டு பிரம்மோற்சவ விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் அம்மையார் கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னர், அறங்காவல் வாரிய நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த ஆண்டு கரோனா பரவல் சூழலால் விழா நடத்தப்படவில்லை. நிகழாண்டு பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் உடனடியாக தொடங்கப்படும். மார்ச் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. மார்ச் 25-ல் திருக்கல்யாணம், 27-ல் தேரோட்டம், 31-ல் தெப்பத் திருவிழா ஆகியன நடைபெற உள்ளன என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x