Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM
குடியரசு தினத்தை முன்னிட்டு, கோவை ஜெய்ஹிந்த் பவுண்டேசன் அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்போடு, கோவை க.க.சாவடி அருகே பழ மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் 7 ஏக்கர் பரப்பளவில் மா, கொய்யா உள்ளிட்ட 15 வகையான 1947 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கத்தோலிக்க பிஷப் தாமஸ் அக்வினாஸ், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பின் தலைவர் பஷீர் அகமது, ஜெய்ஹிந்த் பவுண்டேசன் நிர்வாக அறங் காவலர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT