Published : 14 Jan 2021 03:23 AM
Last Updated : 14 Jan 2021 03:23 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று கனமழை பெய்தது. மீன்பிடி தொழில், தென்னை சார்ந்த தொழில், ரப்பர் பால் வெட்டுதல், செங்கல் சூளை, கட்டிட தொழில், உப்பளம் என, அனைத்து தரப்பு தொழில்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பாலமோரில் 64 மிமீ மழை பெய்திருந்தது. நாகர்கோவிலில் 42 மிமீ., குளச்சலில் 24, கொட்டாரத்தில் 20, மயிலாடியில் 21, மாம்பழத்துறை யாறில் 32, குருந்தன்கோட்டில் 39, ஆனைக்கிடங்கில் 36 மிமீ மழை பெய்திருந்தது.
பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 3,953 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 45.40 அடியாக உள்ளது. கோதையாறு நீர்மின் நிலையம் அலகு இரண்டில் மழையால் அதிகமான தண்ணீர் வரத்து இருந்ததால், விநாடிக்கு 2,800 கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரும் பேச்சிப்பாறை அணை க்கு வருகிறது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 2,113 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 68.18 அடியாக உள்ளது. மாவட்டத்தில் அனைத்து குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT